சுவாதியை கொலை செய்த கொலையாளி பற்றிய வீடியோ மூலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், அதில் கொலையாளியின் முகம் தெளிவாக தெரியவில்லை. எனவே, அவனை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சுவாதி கொலை பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. இதுபற்றி செய்தியாளர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் கருத்து கேட்டனர்.