சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்!

திங்கள், 14 மார்ச் 2022 (19:28 IST)
சென்னை துணை போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ரூபாய் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இன்று திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 
 
இந்த சோதனையின் முடிவில் ரூபாய் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அலுவலகத்தில் உள்ள உதவியாளர்களிடம் இருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக ரூபாய் 5 லட்சம் லஞ்சம் தருவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது 
 
இந்த சோதனையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்