இந்த வழக்கில் ராம்குமாரை தேவையில்லாமல் சேர்த்து, அவரை குற்றவாளியாக்க காவல்துறை முயற்சிக்கின்றனர். ராம்குமார் புகைப்படம் அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில், அடையாள அணிவகுப்பு நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மேலும், இந்த வழக்கில் தனக்கு துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என்று ராம்குமார் என்னிடம் தெரிவித்தார். அவர் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார், அதற்கான சிகிச்சை ராம்குமாருக்கு அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கூறினார்.