கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை பகுதியை அடுத்த மேலகம்பேஸ்வரம் பகுதியை சார்ந்த சக்தி (35), வெள்ளைச்சாமி (வயது 36) ஆகிய இருவரும் பணி நிமித்தமாக குளித்தலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மணல் லாரிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி, அப்பகுதியில் திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் குளித்தலை டூ மணப்பாறை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.