தந்தை பெரியார் காலத்திலே இருந்து இதுவரை இந்த இயக்கத்தை உண்மையிலேயே திமுகதான் வழி நடத்திச் செல்கிறது. ஏன் இந்த இயக்கத்திலே பீடு நடைபோடுகிறோம். பெருமித நடைக்குச் சொந்தக் காரர்களாக இருக்கிறோம் என்பதையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்த்து, இந்த நடை தொடர, இந்த எண்ணங்கள் மலர, இந்த இலட்சியங்கள் வெற்றி பெற அனைவரும் எங்களோடு இணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.