நீண்ட இடைவெளிக்கு பின் நாளை முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் குஷி!

திங்கள், 31 ஜனவரி 2022 (08:28 IST)
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி நாளை முதல் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் குஷியாகிய்ள்ளனர்.
 
ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது
 
ஆனாலும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து நாளை மீண்டும் பள்ளிக்கு செல்வதற்கு மாணவர்கள் உற்சாகமாகி தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளை பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்