கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க புதிய 2000, 500 ரூபாய் நோட்டை வெளியிட்டு பழைய 500, 1000 ரூபாய் நோட்டை முடக்கியது மத்திய அரசு. இந்நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டிலும் தற்போது கள்ள நோட்டு பரவ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வேலூரில் மாங்காய் மண்டியில் ஒருவர் 2000 ரூபாய் கலர் ஜெராக்ஸ் கொடுத்து 250 ரூபாய்க்கு மாங்காய் வாங்கிவிட்டு மீதி 1750 ரூபாயை வாங்கி சென்றுள்ளார். பின்னர் அது கலர் ஜெராக்ஸ் என தெரிந்த மாங்காய் மண்டிக்காரர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.