சென்னை உயர் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்போவதாக வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் மன்றோ சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற சங்கத் தலைவர் பால் கனகராஜ் பேரணியை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இருந்து சென்னை வந்துள்ள பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர். மேலும் இந்த பேரணியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களும், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணியை வழிநெடுக கண்காணிப்பு கேமரா அமைத்து காவலர்கள் கண்காணித்தனர். ஊர்வல பாதையில் கறுப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது.