எம்.ஜி.ஆர். சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்‌தின‌ர்.

முன்னாள் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாட‌ப்ப‌ட்டது.

சென்னை ராயப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலர் ஜெயலலிதா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்‌தினா‌ர்.

பி‌ன்ன‌ர் எம்.ி.ஆரபிறந்தநாளவிழசிறப்பமலரஜெயலலிதவெளியிட்டார். முதலபிரதியை பொருளாள‌ர் ஓ.பன்னீர்செல்வமபெற்றுககொண்டார். அதனைததொடர்ந்தபல்வேறஉயிரிழந்த 29 அ.இ.அ.ி.ு.க.வினரினகுடும்பங்களுக்கதலூ.50 ஆயிரமநிதியுதவியஜெயலலிதவழங்கினார்.

விழா‌வி‌ல் அவைததலைவரமதுசூதனன், தலைமநிலையசசெயலாளரே.ஏ.செங்கோட்டையன், தலைமகழநிர்வாகிகளு.முத்துசாமி, தளவாய்சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை, லியாகதஅலிகான், எஸ்.ி.ே. ஜக்கையன், சுலோச்சனசம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், வளர்மதி, கோகுலஇந்திரஉள்ளிட்நிர்வாகிகளும் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

சென்னை கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்‌தின‌ர்.

தியாகராயநகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவசிலைக்கு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர், ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்‌தின‌ர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில், கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்