×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஈழத்தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது : பா.ஜ.க. குற்றச்சாட்டு
திங்கள், 29 டிசம்பர் 2008 (19:47 IST)
ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என்றும் இலங்கையில் மனித உரிமை மீறப்படுகிறது என்றும் பா.ஜ.க. மேலிடப்பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "இலங்கையில் நடைபெற்று வரும் போரால் அப்பாவி ஈழத்தமிழர்கள் நாளுக்கு நாள் பெரும் துயருக்கு ஆளாகி வருவதுடன் தினமும் பலர் அங்கே மடிந்து வருகிறார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.
இலங்கையில் நடைபெறும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைத்து தீர்வு காணவேண்டும் என்று மத்திய அரசிடம் தி.மு.க. அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் மத்திய அரசு இதனை காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உறுதி மொழியையும் இங்குள்ள தி.மு.க. அரசால் பெறமுடியவில்லை.
பா.ஜ.க. வைப் பொறுத்தவரையில் இலங்கை தமிழர்களை முழுமையாக ஆதரிக்கிறது. அவர்கள் உயிர், சொத்துக்கள், உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க.விற்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. மனித உரிமை ஒப்பந்தம் ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டு 60-வது ஆண்டு கொண்டாடப்படுகிற இந்த நாளில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!
செயலியில் பார்க்க
x