மக்களவை தேர்தலின் போது அ.இ.அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர்கள் அண்மையில் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை செய்தனர்.
மத்தியில் 3வது அணி அமைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இடதுசாரிகள், தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். பின்னர் மத்தியில் 3-வது அணி அமைக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவருடன் விரிவாக ஆலோசனை செய்தார்.