இதுகுறித்து காங்கிரசார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்ட 62 பேரை கைது செய்தனர்.
இதேபோல் மோதலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பச்சை, பகலவன், சாரநாத், ரஜபுத்திரன் உள்ளிட்ட 11 கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.