ஈரோடு அருகே சமையல் வாயு கசிந்து ‌‌தீவிபத்து : 2 பே‌ர் ப‌லி!

சனி, 15 நவம்பர் 2008 (13:02 IST)
ஈரோடு அருகே ‌வீ‌ட்டி‌ல் சமையல் எ‌ரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் மகள் ப‌லியானா‌ர்க‌ள்.

ஈரோடு அருகே உள்ள பெருந்துறை மேற்கூர் வீதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவருக்கு சொந்தமான வீட்டை திருவண்ணாமலையை சேர்ந்த சரவணன் (30) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இவருடைய மனைவி ரேவதி (22), மகள் சாத்னா (2).

சம்பவத்தன்று இரவு சமையல் வேலையை முடித்துவிட்டு ரேவதி சமையல் எரிவாயுவை சரியாக அடைக்காமல் விட்டுவிட்டார். இதனால் இரவு முழுவதும் எரிவாயு கசிந்து கொண்டே இருந்துள்ளது. மறுநாள் காலை எழுந்து காபி போடுவதற்கு முயன்றபோது எ‌ரிவாயு உருளை வெடித்துள்ளது.

இ‌தி‌ல் வீட்டில் இருந்த சரவணன், ரேவதி மற்றும் குழந்தை சா‌த்னா மீது தீ பிடித்து காயம் ஏற்பட்டது. இவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அ‌னும‌தி‌க்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அ‌ங்கு ரேவதியும் அவர் மகள் சாத்னாவும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். இ‌ந்த ‌விப‌த்து‌க் கு‌றி‌த்து பெருந்துறை காவ‌ல்துறை‌யின‌ர் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்