பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகள்: இந்தியா கவலை

வியாழன், 9 பிப்ரவரி 2012 (13:39 IST)
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகளின் வருகை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

சீனா சென்றுள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சர் யாங் ஜியெச்சி உள்ளிட்ட 4 தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகளின் வருகை குறித்து கிருஷ்ணா, இந்தியாவின் கவலையை வெளியிட்டார்.

முன்னதாக இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் கூறுகையில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் வீரர்கள் உள்ளிட்ட 4,000 சீனர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளனர் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்