ஜார்க்கண்டில் 2 பேரைக் கொன்ற மாவோயிஸ்ட்

சனி, 24 அக்டோபர் 2009 (13:41 IST)
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் காவல்துறையினருக்கு உளவு தெரிவிப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் 3 பேரை கடத்திச் சென்ற மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 2 பேரைக் கொலை செய்துள்ளர். மற்றொருவர் கதி என்னவென்று தெரியவில்லை.

சண்டோ கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை நேற்றிரவு கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்றதாகவும், இன்று காலை 2 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மற்றொருவர் என்ன ஆனார்? என்ற விவரம் தெரியவில்லை.

அவர்கள் காவல்துறையினருக்கு உளவு சொன்னதாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கருதியதன் பேரிலேயே அவர்களைக் கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்