மாவோயிஸ்ட் அமைப்புக்கு தடை ஏன்: ப.சிதம்பரம் விளக்கம்

செவ்வாய், 23 ஜூன் 2009 (11:50 IST)
மாவோயிஸ்ட் அமைப்புக்கு தடை விதித்தது ஏன் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

கடந்த 2004ம் ஆண்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் ஆகிய தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதையடுத்து, அந்த இரு அமைப்புகளும் இணைந்து, `சி.பி.ஐ.-மாவோயிஸ்ட்' என்ற தீவிரவாத அமைப்பாக மாறின. அந்அமைப்பு தீவிரவாத அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதனாலதடை விதிக்கப்படுகிறது.

இந்அமைப்புக்கு ஆந்திரா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசும், குற்றவியல் சட்ட திருத்த சட்டத்தின் 16வது பிரிவின்கீழ், மாவோயிஸ்ட் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை கோரிக்கவிடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மாவோயிஸ்ட் அமைப்புக்கு தடை விதிப்பதில் மேற்கு வங்க அரசுக்கு உடன்பாடில்லை என்று தெரிகிறது. இவ்விவகாரம் குறித்து முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது அமைச்சரவையை கூட்டி ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்