சபரிமலை: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 11 பக்தர்கள் பலி!

செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (11:20 IST)
கேரளாவில் சபரிமலைக்கு சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டதில் 11 பக்தர்கள் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் தொரட்டூரைச் சேர்ந்த சுமார் 60 பேர் ஒரு பேருந்தில் சபரிமலைக்கு சென்றனர். இன்று அதிகாலை அந்த பேருந்து, சபரிமலை மலைப்பாதையில் எருமேலி அருகே பாந்தா என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கிய 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்த 40 பேர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்தவமனை மற்றும் காஞ்சிராப்பள்ளி தாலுகா மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, கேரள அரசு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்