இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Siva

வியாழன், 19 செப்டம்பர் 2024 (18:07 IST)
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பகலில் கடும் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, இன்னும் சில நாட்கள் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்