காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஞாயிறு, 18 மே 2008 (12:14 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ராணுவ‌த்‌தினருட‌ன் நட‌ந்த ச‌ண்டை‌யி‌ல் 6 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் லர்கம் டிரால் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகா‌ப்பு படையினரு‌க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து ராணுவம், பாதுகா‌ப்பு படை‌யின‌ர் அந்த கிராமத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அ‌ப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவ‌த்‌தின‌ர் ‌மீது சரமா‌ரி து‌ப்பா‌க்‌கி சுடு நட‌த்‌‌தின‌ர். ப‌திலு‌க்கு ராணுவத்தினரு‌ம் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.

இந்த சண்டையில் 6 தீவிரவாதிகள் பலியானார்கள். அவர்களிடம் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்களை ராணுவ‌த்‌தின‌ர் கைப்பற்‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்