'பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது'

வியாழன், 14 ஜூலை 2011 (13:26 IST)
இலங்கை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், அந்த தீர்ப்பின்படி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியே விடுவிக்கப்படுவார் என்று சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வுதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்புக்கான 25 விதிகளுக்குள் இராணுவ சட்டத்தின் கீழ் பொன்சேகா உள்ளடங்கவில்லை.

எனவே அவருக்கு பொதுமன்னிப்பை வழங்க வாய்ப்பு இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்