மன்மோகன் சிங் எனது குடும்பத்தில் ஒருவர் : ஒபாமா

சனி, 24 அக்டோபர் 2009 (13:37 IST)
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும், இந்தியாவையும் தமது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே தாம் கருதுவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் இன்று அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அவரது வருகையை தாம் ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும், மன்மோகனையும், இந்தியாவையும் தமது குடும்பத்தில் ஒரு அங்கத்தினரகாவே தாம் கருதுவதாகவும்,எனவேதான் தாம் மன்மோகனுக்கு அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஒபாமா கூறியுள்ளார்.

பிரபல இந்திய - அமெரிக்க தலைவரான சான்ட் சாட்வால், ஒபாமாவை சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே மன்மோகனை வரவேற்க அதிபர் மாளிகையில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்