இனப் படுகொலையின் உச்சக்கட்டம்! ஒரு வாரத்தில் 583 தமிழர்கள் படுகொலை!
செவ்வாய், 31 மார்ச் 2009 (14:30 IST)
இலங்கையில் வன்னிப் பகுதியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், எறிகணைத் தாக்குதல் நடத்தியும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்கப் படைகள், இன அழிப்புத் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்னிப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால், மாத்தளன் ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வலங்களின் மீது சிறிலங்க படையினர் நடத்திய தொடர்ந்த தாக்குதல்களில் 110 சிறுவர்கள் உள்ளிட்ட 583 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,014 பேர் காயமுற்றுள்ளனர்.
சர்வதேச நாடுகளின் கண்டனங்கள் ஒரு பக்கத்தில் தொடர்ந்துக் கொண்டிருந்தாலும், அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் தமிழர்களைக் கொன்றொழிக்கும் இன்ப படுகொலையை தொடர்ந்துவரும் சிறீலங்க அரசு, கர்ப்பினிப் பெண்களை குறிவைத்து ஸ்னைப்பர் என்றழைக்கப்படும் துல்லியமாக குறிவைத்துச் சுடும் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் பல கர்ப்பினிப் பெண்கள் இத்தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தக் காட்சிகளை இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம் (பார்ப்பதற்கு மிகச் சங்கடமானதாக இருந்தாலும், வன்னியின் உண்மை நிலவரத்தை உலகின் பார்வைக்குக் கொண்டுவரும் நோக்குடன் இங்கு தரப்பட்டுள்ளது - ஆசிரியர்).