இந்தியா-மியான்மர் உறவு மேம்படும்: அன்சாரி

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (16:52 IST)
இந்தியா-மியான்மர் இடையிலான இருதரப்பு உறவு புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல இருதரப்பினரும் முடிவு செய்துள்ளதாக இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.

மியான்மருக்கு 4 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள அன்சாரி, இன்று அந்நாட்டுத் தலைநகர் யாங்கூனில் செய்தியாளர்களிடம் பேசினார்.

வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் மியான்மர் தலைவர்களுடன் விவாதித்ததாகவும், குறிப்பாக அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் தான்-ஸ்வே, துணை ஜெனரல் மாவுங் அயே ஆகியோருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்