வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்க அரசு நேற்று அறிவித்த புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள, வள்ளிபுனம் பள்ளியில் இயங்கும் முல்லைத்தீவு பொது மருத்துவமனையைக் குறிவைத்து இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12:30 மணிக்கு சிறிலங்க படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில், தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவை உள்ளிட்ட முக்கியக் கட்டிடங்கள் கடுமையான சேதமடைந்தன என்று தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.