ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 20 படை‌யின‌ர் ப‌லி!

திங்கள், 19 மே 2008 (13:09 IST)
ம‌ன்னா‌ரி‌ல் த‌‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 20 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 40‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இல‌ங்கை ம‌ன்னா‌ர் கரு‌‌ங்க‌ண்ட‌ல்குள‌ம் அணை வ‌ழியாக வ‌ண்ணா‌ங்குள‌ம் நோ‌க்‌கி நே‌ற்று காலை 5 ம‌ணி முத‌ல் 11 ம‌ணி வரை ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் மே‌ற்கொ‌ண்ட மு‌ன்நக‌ர்வு முய‌ற்‌சிகளு‌க்கு எ‌திராக த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல் 20 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 40 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் படுகாயமடை‌ந்து‌ உள்ளதாக பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

மேலு‌ம், நெடு‌ங்க‌ண்ட‌ல்குள அணை‌ப் பகு‌தி‌யி‌ல் மு‌ன்நகர முய‌ற்‌சி‌‌த்த ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு எ‌திராக ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கடு‌ம் எ‌தி‌ர்‌த் தா‌க்குத‌‌ல் நட‌த்‌தி வருவதாகவு‌ம் அ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்