மலேசியத் தமிழ் நாளிதழ் மீதான தடை நீக்கம்!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (11:23 IST)
மலேசிய தமிழ் நாளிதழான மக்கள் ஓசை மீதான தடையை மலேசிய அரசு நீக்கியுள்ளது.

மக்கள் ஓசை நாளிதழ் வெளியீட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி கடந்த வாரம் மலேசிய அரசு அதன் உரிமத்தை நீட்டிக்க மறுத்தது. இதனால் அங்கு எதிர்‌க்கட்சிகள் மற்றும் செய்தி ஊடகங்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து மலேசிய அரசு தடையை நீக்கியதாக நேற்று அறிவித்தது.

இதற்கிடையே நாளிதழின் பொறுப்பாசிரியர்கள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மலேசிய தேசக் கட்டுமானத்திற்கஉரிபங்களிப்பு செய்வதாக உறுதிமொழி அளித்துள்ளதால் தடை நீக்கப்பட்டது என்று மலேசிய உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்