பெனாசிர் மரணத்திற்குப் பின்பு பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழிநடத்தி வரும் ஜர்தாரி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "நடக்கவுள்ள தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலின் போது முறைகேடுகள் நடந்தால் எங்கள் கட்சித் தொண்டர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள்.
தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். இதுதான் அதற்கு ஏற்ற தருணம்" என்றார்.