ஹனீஃப் மீதான வழக்கு : மறுபரிசீலனைக்கு உத்தரவு!

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (14:19 IST)
கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்!

இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த ஹனீஃபின் வழக்கறிஞர் பீட்டர் ரஸ்ஸோ, ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்களை வேறொருவர் பார்த்து உறுதி செய்தால், அது நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஹன·பிற்கு எதிரான வழக்கு மிக மிக பலவீனமானதாக உள்ளது என்றும், எனவே அவர் மீதான வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டு விடுதலை செய்ய ஆஸ்ட்ரேலிய அரசு யோசித்து வருகிறது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்