மும்பை பங்கு சந்தை குறியீடு 155 புள்ளிகள் உயர்வு

Webdunia

வியாழன், 12 ஜூலை 2007 (12:10 IST)
சர்வதேச பங்கு சந்தைகளில் ஏற்பட்டு வரும் உயர்வின் தாக்கத்தால் இந்திய பங்கு சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீடு அதிகரிப்பதன் காரணமாக இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தை 155 புள்ளிகள் அதிகரித்து மீண்டும் 15,000 புள்ளிகளை தாண்டியது.

நேற்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் 99 புள்ளிகளை இழந்த மும்பை பங்கு சந்தை இன்று 5 நிமிடத்தில் 155 புள்ளிகளை அதிகரித்து கொண்டது. தேச பங்கு சந்தை குறியீடு 43 புள்ளிகள் உயர்ந்து 4,430 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்