மக்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், கடந்த நான்கு மாதங்களில் ஆறு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இந்தியாவையும் பாதித்துள்ளது. சென்ற வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த ஜனவரியில் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.