ரூபாய் மதிப்பு 32 பைசா சரிவு

திங்கள், 15 டிசம்பர் 2008 (14:15 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.32 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.65 ஆக அதிகரித்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 32 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.33-48.34 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.93 முதல் ரூ.48.05 என்ற அளவில் இருந்தது.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சாதகமான நிலை இருந்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வது குறைவதுடன். வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்வதால் டாலரின் மதிப்பு குறைந்து., இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.47.94 பைச
1 யூரோ மதிப்பு ரூ.64.70
100 யென் மதிப்பு ரூ.52.69
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.72.07

வெப்துனியாவைப் படிக்கவும்