பங்கு சந்தை: சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்வு

வியாழன், 15 செப்டம்பர் 2011 (17:51 IST)
மும்பைப்பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 167 புள்ளிகள் அதிகரித்து 16,876.54 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 63.15 புள்ளிகள் அதிகரித்து 5,075.70ஆக உயர்ந்து முடிவடைந்துள்ளது.

ஐ.டி., ரியால்டி, டெக் மற்றும் வங்கித் துறை பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. பி.எஸ்.இ.30 பங்கு வர்த்தகத்தில் இன்று 20 நிறுவனங்கள் லாபம் கண்டன, 10 நிறுவனங்கள் பின்னடவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் புள்ளிகளைத் தீர்மானிக்கும் இரண்டு முதன்மை நிறுவனங்களான ரியலையன்ஸ் ஈன்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிச் இரண்டும் அதிகரிப்பில் முடிந்தன. டாடா மோட்டார்ஸ் 5.04% உயர்வடைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்