சென்செக்ஸ் 30, நிஃப்டி 15 புள்ளிகள் குறைந்து முடிந்தன

வெள்ளி, 21 ஜனவரி 2011 (20:33 IST)
இன்றைய காலை வர்த்தக தொடக்கத்திலேயே சரிவைக் கண்ட இந்தியாவின் பங்குச் சந்தைகள் முடிவுலும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் இன்று காலை 32 புள்ளிகள் குறைந்து வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தில் மிக அதிக அளவாக 19,065.34 புள்ளிகளுக்கு உயர்ந்தது இறுதி கட்டத்தில் 30 புள்ளிகள் குறைந்து 19,007.53 புள்ளிகளாக முடிந்தது.

தேசப் பங்குச் சந்தையான நிஃப்டி 15.10 புள்ளிகள் குறைந்து 5,696.50 புள்ளிகளில் நிறைவுற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்