மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது வர்த்தகம் அதிகரித்த குறியீட்டு எண்கள், நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தது.
நண்பகல் 12 மணிக்கு பிறகு எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் குறைய தொடங்கின. பங்குச் சந்தைகளின் வர்த்தகம் முடியும் போது, எல்லா குறியீட்டு எண்களும் குறைந்தன.
இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென்கொரியா, சிங்கப்பூர், சீனா ஆகியவற்றின் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்தன. அதே நேரத்தில் ஹாங்காங், ஜப்பான் ஆகியவற்றின் குறியீட்டு எண்கள் குறைந்தன.
இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 91.15 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,287.31 புள்ளிகளாக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 8.21, பி.எஸ்.இ. 500- 23.84, சுமால் கேப் 11.74 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 28.60 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5165.90 புள்ளிகளாக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 9.15, பாங்க் நிஃப்டி 8.00, சி.என்.எக்ஸ்.100- 25.15, சி.என்.எக்ஸ்.டிப்டி 52, சி.என்.எக்ஸ். 500- 11.15, சி.என்.எக்ஸ். மிட் கேப் 6.30 புள்ளி குறைந்தது.
ஆனால் சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 8.95, சி.என்.எக்ஸ். ஐ.டி.39.05 புள்ளி அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,296 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,397 பங்குகளின் விலை குறைந்தது, 75 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் வங்கி பிரிவு 1.67%, ரியல் எஸ்டேட் 1.67%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 1.33%, உலோக உற்பத்தி பிரிவு 0.49% குறைந்தன.
நுகர்வோர் பொருட்கள் பிரிவில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.57%, தொழில்நுட்ப பிரிவு 0.39%, மின் உற்பத்தி பிரிவு 0.07%, வாகன உற்பத்தி பிரிவு 1.71% பொதுத்துறை நிறுவனங்கள் 0.91% அதிகரித்தன.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,923.73 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,691.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இதேபோல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.1,709.68 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 1,306.41 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.