கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுப்பிரமணிய சாமி, ”மசூதிகள் மத வழிபாட்டு தலங்கள் அல்ல. அதை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம். எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம் என்று கூறியிருந்தார்.
எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து அந்த அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அஸ்ஸாமில் சுப்பிரமணியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சுப்பிரமணியசாமி தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன.
இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக தடைவிதிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.பந்த், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்சிற்கு சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.