அக்டோபரில் 54 லட்சம் பேர் வேலையிழப்பு: என்ன காரணம்?

புதன், 3 நவம்பர் 2021 (22:46 IST)
கடந்த மாதம் அதாவது அக்டோபரில் 54 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பண்டிகை காலத்தில் சில்லறை வர்த்தக சந்தை சூடுபிடித்துள்ள போதும் அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 54 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையம் எடுத்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
40.62 கோடியாக இருந்த வேலை செய்துகொண்டிருந்தார் எண்ணிக்கையை அக்டோபரில் 40.07 கோடியாக குறைந்து உள்ளதாகவும் அந்த கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்