மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம்.
டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனை அடுத்து அவர் சமீபத்தில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது.
அதேபோல் இவ்வழக்கில், மணீஷ் சிசோடியா 'தனக்கு ஜாமீன் தரும்படி, சிசோடியாவும் முறையிட்டதுடன்ம் 9 முதல் 10 மணி நேரம் என்னை அமரவைத்து ஒரே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்டு மனவுளைச்சல் உண்டாக்கியதாக' அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, நீதிமன்றம், சிசோடியாவை மேலும் 2 நாட்கள்( மார்ச் 6ஆம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.