டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார் பாதிக்கப்பட்ட சிறுமி. இவரது தாய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் இது பற்றி வெளியில் சொன்னால் சிறுமியையும், அவரது தாயையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் வெளியில் சொல்ல முடியாமல் மனதில் புழுங்கி வந்த சிறுமியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.