உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7ஆம் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு மத்திய அரசு, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
மீண்டும் அவை தொடங்கப்பட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா கூறுகையில், "பிரதமர் கண்டிப்பாக இதற்கு விளக்கமளிக்க வேண்டும். இவை எல்லாம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் டெரெக் ஒ’பிரையன், ”பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதற்கு உங்களது 56 இஞ்ச் மார்பு தேவையில்லை; உங்களது 4 இஞ்ச் இதயம் போதும்," என்று விமர்சித்துள்ளார்.