குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அம்மாநிலம் முழுவதும் நேற்று திரையிடப்படுமென விளம்பரப்படுத்தபட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய இந்த திரைப்படத்தை திரையிட்டால் அசம்பாவிதங்கள் நடைபெறுமென்ற அச்சத்தில் திரையரங்கு உரிமையாளர்களே இந்த திரையிடல்களை ரத்து செய்ததாக தெரிகிறது.
இவ்விவகாரத்தில் பாஜக-வின் பங்கு ஏதுமில்லாதது போல் காட்டிக் கொண்டு, இந்த விளம்பர செலவு முழுவதும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருடையது என்று காட்டிக் கொள்ள நினைக்கும் அக்கட்சியின் போக்குக்கு தேர்தல் ஆணையம் இடம் அளித்துவிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.