இதனையடுத்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் போராட்டங்கள், முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.
தன்னுடைய மாநில விவசாயிகளின் வாழ்வாதரத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போது தண்ணீர் பெற்ற தமிழக முதல்வரின் உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்துவது எந்த வகையில் நியாயம். எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு பல வழிகள் இருக்கிறது. இது போன்ற அநாகரிகமான முறையில் செயல்படுவது இரு மாநிலத்திற்கும் இடையே சுமூகமான உறவை உருவாக்காது.