சூரியன் குறித்துக் கண்டறிய உலக நாடுகள் ஆய்வுகள் செய்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா சூரியனைக் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தியாவும் தனது ஆதித்யா விண்கலம் மூலம் சூரியன் குறித்த ஆய்வுகளைத் தொடங்கியது. இதற்காக ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்தச் சூழலில் ஆதித்யா விண்கலம் 127 நாட்கள் பயணித்து இன்று மாலை 4 மணி அளவில் எல்1 புள்ளியைச் வெற்றிகரமாக சென்றடைந்தது. ஆதித்யா விண்கலம், செங்குத்தான சுற்று வட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுற்று வட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்த ஆய்வுகளை ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு..
இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்கி உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.