ஜேம்ஸ் வசந்தன் கைது - திரையுலகம் ஏன் மௌனம் காக்கிறது?

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2013 (16:46 IST)
FILE
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரும், சினிமா இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனை போலீஸார் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். மொத்தம் 4 வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார்.

இவ்வளவு பெரிய குற்றச்சாற்றுக்கு ஆளாகும்படி ஜேம்ஸ் வசந்தன் என்ன செய்தார்? அவர் மீதான புகார் என்ன?

ஜேம்ஸ் வசந்தனின் பக்கத்து வீட்டில் வசிக்கும், ராதா வேணு பிரசாத் என்ற பெண்மணியை பார்த்து ஆபாசமாக சைகை செய்தாராம். அதற்குத்தான் இத்தனை களேபரமும். பெண்மணி என்று குறிப்பிட்டது மரியாதைக்காக. 68 வயது கிழவியாம் இந்த ராதா வேணு பிரசாத். இந்த 68 வயது பேரிளம் பெண்ணுக்கு ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்பதே சந்தேகத்தை எழுப்பும் விஷயம். ராதா வேணு பிரசாத்தின் பின்னணியும் அதை உறுதி செய்கிறது.

ராதா வேணு பிரசாத் தனது பக்கத்து வீட்டை - அதாவது....

ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை தனது மகனுக்காக வாங்க நினைத்து கேட்டிருக்கிறார். அவரின் மகன் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் அதிகாரியாம். ஆனால் வீட்டை விற்க ஜேம்ஸ் வசந்தன் மறுத்திருக்கிறார். இதன் காரணமாக ராதா வேணு பிரசாத் வன்மத்துடன் பலமுறை பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசி அஸ்திரமாக கமிஷனர் ஜார்ஜின் மூலம் செக்ஸ் டார்ச்சர் என்று சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கமிஷனர் ஜார்ஜ் மலையாளி. ராதா வேணு பிரசாத்தின் உறவுக்காரர்களுக்கு வேண்டப்பட்டவர். மலையாளிகள் நினைத்தால் 68 வயசு பேரிளம் பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக தமிழக்த்தின் பிரபலமான ஒருவரையே சிறையில் தள்ள முடிகிறது. இதுவே கேரளாவில் நடக்குமா? போராட்டம், சாலை மறியல் என்று களேபரப்படுத்திவிட மாட்டார்களா? இப்படியொரு அநியாயம் நடந்தும் ஜேம்ஸ் வசந்தன் பணிபுரிகிற தொலைக்காட்சி ஊடகங்களும், சினிமாதுறையும் மௌனம் காத்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை... வேதனை.

முதல்வர் தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்