நல்ல டைட்டிலிருந்தா அனுப்புங்க

வெள்ளி, 25 ஜூன் 2010 (13:59 IST)
ராம்கியை ஞாபகமிருக்கிறதா, நிரோஷாவுக்குப் பின்னால் 'செந்தூரப் பூவே' என்று பாட்டுப் பாடித் திரிந்தாரே, இணைந்த கைகள் படத்தில் நடித்திருந்தாரே அவரே தான்.

மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைக்கப் போகிறாராம். பயப்படாதீர்கள், இம்முறை கதாநாயகனாக அல்ல இயக்குநராக வருகிறார். முன்னணி நடிகர் நடிகைகளோடு புதுமுகங்களும் நடிக்கும் இந்தப் படம் வித்தியாசமான காதல் கதையாம்.

என்ன டைட்டில் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் ராம்கி. டைரக்டர் சார், படத்துல நிரோஷா ஆண்டிக்கு ஏதும் ரோல் வைச்சிருக்கீங்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்