சிக்கலில் மாயாண்டி குடும்பத்தார்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:06 IST)
பத்து இயக்குனர்களை வைத்து இராசு மதுரவன் இயக்கும் படம் மாயாண்டி குடும்பத்தார். இதில் மாயாண்டியாக மணிவண்ணன் நடிக்கிறார். அவரது மகன்களில் ஒருவராக சீமான் நடிப்பதாக இருந்தது.

இதற்காக வத்தலகுண்டு வந்தவரை‌த்தான் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாயாண்டி குடும்பத்தாரை பொறுத்தவரை, சீமானை மனதில் வைத்து பல காட்சிகளை எழுதியிருக்கிறார் இயக்குனர் இராசு மதுரவன். சீமான் நடித்தால் மட்டுமே பேசப்படும் காட்சிகளாம் அவை.

சீமானின் திடீர் கைது காரணமாக இயக்குன‌ரின் திட்டத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சீமானுக்காக காத்திருப்பதா? வேறு நடிகரை சீமான் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதா?

இரண்டுமே சிக்கல்தான் என்றாலும் காத்திருக்கும் முடிவையே எடுத்திருக்கிறது மாயாண்டி குடும்பத்தார் யூனிட்.

வெப்துனியாவைப் படிக்கவும்