எந்திரன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:34 IST)
பெரு நாட்டில் தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பு கோவா ஷெட்யூலுக்குப் பிறகு குலு-மணாலி செல்வதாக திட்டம். மணிரத்னத்தின் படத்துக்கு ஐஸ்வர்யா ராய் கால்ஷீட் கொடுத்திருந்ததால் அந்த திட்டத்தை கைவிட்டு ர‌ஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் ஷூட் செய்தார், ஷங்கர்.

மணிரத்னம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் நாளை முதல் எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ஐஸ்வர்யா ராய். ர‌ஜினியும், ஐஸ்வர்யா ராயும் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் குலு-மணாலியில் படமாக உள்ளன.

இதற்காக எந்திரன் யூனிட் விரைவில் குலு-மணாலி செல்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்