பிருந்தாசாரதி இயக்கத்தில் சேரன், ஜீவா!

புதன், 7 ஜனவரி 2009 (21:21 IST)
ஜீவாவை வைத்து தித்திக்குதே படத்தை இயக்கியவர் பிருந்தாசாரதி. இவர் அடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார்.

இரண்டு ஹீரோ கதையான இதில் சேரன், ஜீவா இருவரும் நடிக்கிறார்கள். பொக்கிஷம் படத்தை இயக்கி நடித்துவரும் சேரன், அது முடிந்த பிறகு பிருந்தாசாரதி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க பிரபல நடிகர்கள் யாரும் முன்வருவதில்லை. ஜீவா விதிவிலக்கு. அரண் படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்தவர், இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

சொன்னதை செய்த ஜீவாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்