மதர் கிரேஸ் முவிஸில் வெங்கட்பிரபு!

வியாழன், 16 அக்டோபர் 2008 (15:27 IST)
வெங்கட்பிரபு அடுத்து செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவும், வார்னர் பிரதர்சும் இணைந்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். படத்துக்கு கோவா என்று பெயர் வைத்துள்ளார்.

இதற்குப் பிறகு தனது தந்தை கங்கை அமரனின் மதர் கிரேஸ் முவிசுக்காக படம் பண்ணுகிறார். இந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த படம் பூஞ்சோலை. இதில் வெங்கட் பிரபு நாயகனாக நடித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக படம் வெளிவரவில்லை.

தற்போது தமிழின் முக்கியமான இயக்குனர் என்று பெயர் எடுத்த நிலையில் மீண்டும் மதர் கிரேசில் பணிபுரிய உள்ளார் வெங்கட்பிரபு. இந்த முறை இயக்குனராக என்பதால் படம் நிச்சயம் வெளிவரும் என்று நம்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்