பாடலாசிரியர் நா.முத்துகுமா‌ரி‌ன் மன‌க்குறை

வியாழன், 3 ஜனவரி 2008 (12:25 IST)
ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் ஹீரோவும், இயக்குனரும்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்பதுபோல் சம்பந்தப்பட்டவர்களும் வெளியில் இருப்பவர்களும் நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் தொடங்கி படத்துக்கு பின்புலமாக இருக்கக் கூடியவர்கள் ஏராளம்.

அவர்களையும் கொஞ்சம் மனம் திறந்து பாராட்டுங்கள் என்று வருத்தப்படும் நா.முத்துக்குமார்...இந்த விசயத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் ஜெம்...

சின்ன விசயமானாலும் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு நடு ராத்திரியில் கூட கூப்பிட்டு பாராட்டுவார் என்கிறார்.

உண்மை தான்!

வெப்துனியாவைப் படிக்கவும்