அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அதோடு, கேப்டன் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் (115, 141) சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இது குறித்து இயான் சேப்பல் கூறுகையில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் மூன்றரை நாட்கள் விராட் கோலி செயல்பட்ட விதம், அவர் இந்திய அணியின் முழுநேர டெஸ்ட் கேப்டனாக பதவி உயர்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதை இந்திய தேர்வாளர்களுக்கு உணர்த்தியிருக்கும்.